உள்ளூர் செய்திகள்

சாராய பாக்கெட்டுகள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட கார்களை படத்தில் காணலாம். 

புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்திய 3000 சாராயம் பாக்கெட்டுகள்- 2 கார்கள் பறிமுதல்

Published On 2022-09-07 15:22 IST   |   Update On 2022-09-07 15:22:00 IST
  • புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்திய 3000 சாராயம் பாக்கெட்டுகள். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை பின் தொடர்ந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

கடலூர்:

கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசிக்கு புதுவை மாநிலத்தில் இருந்து மூட்ட மூட்டையாக சாராயம் பாக்கெட்டுகள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் அருகே பெரிய காரைக்காடு பகுதியில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசி தலைமையில் போலீ சார்ரகசியமாக பகுதிமுழுவதும் கண்காணித்திருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு கார் சென்று ஒரு இடத்தில் நின்றது. அப்போது போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை பின் தொடர்ந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது 2 காரிலும் மூட்டையாக சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதனை தொடர்ந்து காரில் இருந்த 2 பேர் நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர்2 கார்களிலும் சோதனை செய்த போது சாராய பாக்கெட் 10 மூட்டைகளில் 3000 சாராய பாக்கெட்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டு கார் மற்றும் 10 மூட்டைகளில் இருந்த சாராயப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News