வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் கனமழை
- வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம்,கந்தம்பாளையம், மூர்த்திபாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம்,கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பாளையம் ,ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில் ,தளவாபாளையம், தோட்டக்குறிச்சி ,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.