பாண்டிலிங்கபுரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்
- வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்
- மேலாளர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள பாண்டிலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சின்னதாராபுரம் வட்டார கள மேலாளர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சங்கத்தி ல் உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து கடன்களும் உறுப்பினர்களின் தேவைக்கேற்ப சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல் மற்றும் உறுப்பினர்கள் எவரும் இறந்திருந்தால் அவருடைய வாரிசுகள் இறப்பு சான்றிதழை ஆகியவற்றை சங்கத்தில் நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும்.
நபார்டு வங்கியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு மத்திய வங்கியும் இணைந்து நிதி சார் கல்வி திட்டத்தின்படி சங்கத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களை பெற்று சங்க உறுப்பினர்கள் பயன்பெற வேண்டும் என்று அவர் பேசினார்.
சங்க செயலாளர் மணி சங்கத்தில் உறுப்பினர்கள் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் சங்கத்திற்கு வழங்கவேண்டும்,சங்க விவகார எல்லையில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் வந்து உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளவேண்டும்என்று பேசினார்.
கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சிவானந்தம் வரவேற்புரை ஆற்றினார். சங்க பணியாளர் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் செய்திருந்தது.