உள்ளூர் செய்திகள்
- கரூர் தேசிய நெடுஞ்சாலை சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே ஒருவர் மது பாட்டில்களை மறைத்து வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒரு இளைஞர் மது பாட்டில்களை மறைத்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மங்களம் அருகே கொட்டையூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 27) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.