நாணல் , செடி கொடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- புகளூர் சாலையில் உள்ளநாணல் , செடி கொடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- விவசாயிகள் இடுபொருட்களையும் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நொய்யல்
நொய்யல் முதல் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவா பாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலில் இடது கரையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களும் சென்று வந்தன. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் இருபுறமும் ஏராளமான நாணல் தட்டுகள் மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்துள்ளது. இது சாலையை ஆக்கிரமித்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் இடுபொருட்களையும் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்கால் மேட்டில் இருபுறமும் முளைத்துள்ள நாணல் தட்டு மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.