புகழூர் நகர தி.மு.க. ஆய்வுக் கூட்டம்
- அரவக்குறிச்சி தொகுதிபுகழூர் நகர தி.மு.க. ஆய்வுக் கூட்டம்
- வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம், கூட்டம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி புகழூர் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான மொஞ்சனூர் இளங்கோ, புகழூர் நகர்மன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நகரக் தி.மு.க. செயலாளர் சேகர் என்கிற குணசேகரன் கழகத் தொண்டர் ஒவ்வொருவரையும் அவர்களின் தேவையும் தெளிவாக புரிந்து கொண்டு ஒருமைப்பாட்டு உள்ளத்தோடு செயல்பட்டு வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் புகழூர் நகராட்சி பகுதியில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை தி.மு.க.விற்கு பெற்றுத் தருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் புகழூர் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர் மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.