உள்ளூர் செய்திகள்

பெண்ணை ஏமாற்றிய போலீஸ்காரர் மீது வழக்கு

Published On 2023-10-14 12:15 IST   |   Update On 2023-10-14 12:15:00 IST
  • கரூர் தெற்கு காந்தி கிராமம்பெண்ணை ஏமாற்றிய போலீஸ்கார
  • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,  

கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 36) குளித்தலையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பெண் ஒருவரை, திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2012-ம் ஆண்டு ரூ. 3.40 லட்சம், 16 பவுன் தங்க நகையை பாரத் பெற்றுள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக, அந்த பெண்ணை பாரத் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து, பெண் கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் பாரத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News