உள்ளூர் செய்திகள்
மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது
- முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர்
- 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் க.பரமத்தி செல்லும் பிரிவு சாலை அருகே அரசு அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக ஒருவர் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீஸருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து மது விற்பனையில் ஈடுபட்ட நொய்யல் குறுக்கு சாலையைச் சேர்ந்த முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பெரியரெங்கம் பாளையம் பகுதியில் உள்ள முள்காட்டுக்குள் மது விற்பனை செய்த பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி(48 )என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.