உள்ளூர் செய்திகள்

உயர்நிலைப்பள்ளி மாணவி கோலூன்றி தாண்டுதல் போட்டியில் 2-ஆம் இடம்

Published On 2023-09-03 06:45 GMT   |   Update On 2023-09-03 06:45 GMT
தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கோலூன்றி தாண்டுதல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற சாதனை

நொய்யல்,

கரூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட

கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் விளையாடினார்கள்.இதில் 8 ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News