உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-07-14 06:59 GMT   |   Update On 2022-07-14 06:59 GMT
  • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
  • இருசக்கர வாகனம் மீது கார் மோதியது

கரூர்:

கரூர் மாவட்டம், பாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மகாலிங்கம் (வயது 25) இவர், சம்பவத்தன்று இரவு, வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டி பாலத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த மகாலிங்கத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக மகாலிங்கம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News