உள்ளூர் செய்திகள்
- தோகைமலையில் இளம்பெண் மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந் தவர் சாந்தி (வயது 40). இவரது மகள் ஜீவிதா, 'திருச்சி தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 25 இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தன் மகளை கண்டு பிடித்தர வேண்டும் என, தோகைமலை போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.