உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-07-19 12:47 IST   |   Update On 2023-07-19 12:47:00 IST
  • கரூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கரூர், 

சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் ஜீவா (வயது 31). இவர், கரூர் அருகே ஆண்டாங்கோவில் புதுார் பகுதியில் உள்ள, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில், பக்கெட் மூலம் தண்ணீர் இறைக்கும் போது, ஜீவா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை, கரூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News