உள்ளூர் செய்திகள்

போலீசாருடன் வி.சி.க. வாக்குவாதம்

Published On 2023-08-15 12:55 IST   |   Update On 2023-08-15 12:55:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
  • அனுமதி இல்லை என்ற போலீசார் கூறியதால் வாக்குவாதம்

கரூர்,

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறை அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன் தலைமையில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல துணைச்செயலாளர் வழக்கறிஞர் ராஜா என்கிற மன்னன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் சுரேந்தர், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரவிநாத், வடக்கு நகர செயலாளர் அடங்காத்தமிழன் அருள், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை, கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட ஊடக அணி அமைப்பாளர் புலி ஈழம் உதயா, பசுவை மணிமாறன் தரைக்கடை சங்க செயலாளர் சுப்பிரமணி, தமிழ்ச்செல்வன், ஆகாஷ், உப்பிடமங்கலம் மணிமாறன், அரவக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் கட்சிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News