உள்ளூர் செய்திகள்
- கரூர் மாவட்டத்தில் பணிக்கு சென்ற சேல்ஸ்மேன் மாயமாகி உள்ளார்
- மனைவி புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், ராமா கவுண்டனுார் பகுதியை சேர்ந்த காந்தி மகன் மாணிக்கவாசகம் (வயது 40) இவர், கரூரில் தனியார் மொபைல் நிறுவனத்தில், சேல்ஸ்மேனாக பணி யாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக சென்றுள்ளார். ஆனால், இது வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மாணிக்க வாசகத்தின் மனைவி கங்கா, போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.