உள்ளூர் செய்திகள்
- வீட்டில் விளக்கமாறு தயாரித்துக்கொண்டிருந்த பெண் திடீர் என மாயமாகி உள்ளார்
- போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் வாங்கல் செல்லும் சாலை பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்(73). இவரது மகன் நல்லுசாமி(47). கூலித் தொழிலாளி. இந்நிலையில் நல்லுசாமியின் தாயார் பழனியம்மாள் வீட்டில் இருந்து கொண்டு விளக்குமாறு தயாரித்து கொண்டிருந்தார். அப்போது நல்லுசாமி கூலி வேலைக்கு சென்று விட்டார் . வேலை முடிந்து மீண்டும் மாலை வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது தாயார் பழனியம்மாளை வீட்டில் காணவில்லை. நல்லுசாமியின் குடும்பத்தினர் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பழனியம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் பழனியம்மாளை காணவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் நல்லுசாமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.