உள்ளூர் செய்திகள்
- இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி சரோஜா (58). இவர்கள் இருவரும் வாங்கள் டூ கரூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் வெங்கடாசலம் என்பவர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் பட்டு இறந்து விட்டார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் அருகில் கிடந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த வெங்கமேடு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.