உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-10 12:41 IST   |   Update On 2023-08-10 12:41:00 IST
  • சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
  • வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

கரூர், 

கரூர், சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர், கடந்த ஓராண்டாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயக்குமார், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News