உள்ளூர் செய்திகள்
கல் குவாரி எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி
- கல் குவாரி எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
- துண்டு சிக்கியதால் நடந்த சம்பவம்
கரூர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் சிங் (வயது 30) இவர், கரூர் மாவட்டம், தென்னிலையில் தங்கி, அதே பகு தியில் உள்ள, தனியார் கல் குவாரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கல் குவாரியில் உள்ள, இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் சிங் போட்டிருந்த துண்டு எந்திரத்தில் சிக்கி, அவரையும் சேர்த்து இழுத்தது. இதில், தலையில் பலத்த காய மடைந்த ஜஸ்டின் சிங், சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென் னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.