உள்ளூர் செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-08-04 11:49 IST   |   Update On 2023-08-04 11:49:00 IST
  • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை

கரூர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பவுத்திரம் ஊராட்சி முத்து சோளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் தரணிகா ஸ்ரீ (வயது 13). இவர் பவுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் தரணிகா ஸ்ரீ வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதததை அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தரணிகாஸ்ரீ எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News