உள்ளூர் செய்திகள்

ஏகாதசியை முன்னிட்டு - சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-11-24 06:05 GMT   |   Update On 2023-11-24 06:05 GMT
  • சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News