உள்ளூர் செய்திகள்

கருப்பண்ணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-08-07 12:52 IST   |   Update On 2023-08-07 12:52:00 IST
  • தோட்டக்குறிச்சி அருகே கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
  • கருப்பண்ணசாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே குன்னிகாட்டூர் பகுதியில் உள்ள கருப்பண்ணசாமிக்கு ஆடி பதினெட்டு முடிந்த மூன்றாவது நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு கருப்பண்ணசாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கருப்பண்ண சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News