உள்ளூர் செய்திகள்

சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி

Published On 2022-08-09 09:32 GMT   |   Update On 2022-08-09 09:32 GMT
  • சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
  • தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது

கரூர்:

கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் பள்ளியின் தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் பி.எம்.கே பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக முன்னணி பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் கேட்கும் பொருட்களை உடனடியாக பெற்றோர்கள் வாங்கித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காலதாமதம் ஆகும் பட்சத்தில் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கின்றன. சிறிய ஏமாற்றங்கள் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே இதில் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறையை மாற்றி வளர்க்க வேண்டும் என்றார். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி தேவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் ராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி, குன்னம் சத்திரம் சேரன் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News