உள்ளூர் செய்திகள்

வேலாயுதம்பாளையம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி விழா

Published On 2023-07-07 13:41 IST   |   Update On 2023-07-07 13:41:00 IST
  • வேலாயுதம்பாளையம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தவுட்டு ப்பாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், அத்திப்பாளையம், உப்புபாளையம், புன்னம்சத்திரம், புன்னம், கரைப்பாளையம், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, புகளூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News