உள்ளூர் செய்திகள்

கரூர் - திருச்சி சாலையில் மணல் குவியலை அகற்ற கோரிக்கை

Published On 2023-08-02 11:40 IST   |   Update On 2023-08-02 11:40:00 IST
  • கரூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • விபத்து ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அகற்ற வேண்டுகோள்

கரூர், 

கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் இருந்து மாயனூர் வரை சீத்தப்பட்டி, உப்பிடமங்கலம், புலியூர், உள் வீரராக்கியம் ஆகிய பகுதி பிரிவுகள் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த மேம்பால பகுதிகளில் மணல் படிந்துள்ளன. அதிக காற்றின் காரணமாக தற்போது வழக்கத்தை விட அதிகளவு மணல் குவிந்துள்ளன. இதன் காரணமாக பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் குவியலில் சறுக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலை ஓர மணல் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News