உள்ளூர் செய்திகள்

தன்னம்பிக்கையுடன் படியுங்கள் - இறையன்பு

Published On 2023-07-26 13:57 IST   |   Update On 2023-07-26 13:57:00 IST
  • போட்டி தேர்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் படியுங்கள் - முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு
  • கரூர் அரசு மருத்துவ கல்லூரி நடந்த விழாவில் பேச்சு

கரூர், 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கல்லூரி மாணவ மாணவர்களுக்கான போட்டித் தேர்வு களுக்கான நிகழ்ச்சியில் "படிப்பது சுகமே" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் கூறும் போது,போட்டித் தேர்வு என்பது பல்கலை தேர்வுக்கு மாறுபட்டு இருக்கும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கென மனநிலையை உருவாக்கி புரிந்து நன்கு படிக்க வேண்டும். முதலில் போட்டித் தேர்வுகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன அந்த காலியிடங்களுக்கு ஏற்றார் போல் உங்கள் மனநிலையை உருவாக்கி போட்டித் தேர்வுக்கு போட்டியிட வேண்டும்.இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். .ஒன்றைக் குறிப்பிட்டு கொள்கிறேன் வாழ்க்கை என்பது எழுதப்படாத நோட்டு புத்தகங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் ஒவ்வொரு வாரியாக அந்த வாழ்க்கை என்ற புத்தகங்களை நிரப்பும்போதுதான் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.ஒரு மனிதனுக்கு மதிப்பெண் முக்கியமல்ல அவன் சமுதாயத்தில் பெறுகின்ற நன்மதிப்பு தான் அவன் பெரும் மதிப்பெண்ணாகும். ஆகவே சமுதாயத்தில் நீங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியா விட்டாலும் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.போட்டித் தேர்வுகளில் தயாராகும் பொழுது முதலில் எந்தப் பாடத்தை எடுக்க வேண்டும் முடிவு எடுக்கவும், இரண்டாவதாக அதன் தொடர்பு உள்ள பாடங்களை தேடுங்கள். மூன்றாவதாக அதில் உள்ள கருத்துக்களை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வில் குறிப்பு எடுத்தால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும். உங்களுடைய கல்லூரி தேர்வுகளிலேயே மருத்துவம் படித்தாலும் சரி எந்த பாடப்பிரிவுகளும் படித்தாலும் சரி உங்கள் ஆசிரியர் வகுப்பறையில் கற்றுக் கொடுக்கும் குறிப்பு எடுத்து படிக்க வேண்டும்.எனவே படிக்கும் பொழுது தாழ்வு மனப்பான்மையுடன் படிக்காமல் தன்னம்பிக்கையுடன் படியுங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறலாம்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன். தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News