உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2023-09-04 10:03 GMT   |   Update On 2023-09-04 10:03 GMT
  • மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்
  • தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் வெங்கமேடு ஜீவா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News