உள்ளூர் செய்திகள்
புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு திருத்த முகாம்
- புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு திருத்த முகாம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது
- 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம்,புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர்.