உள்ளூர் செய்திகள்

குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2023-02-03 05:39 GMT   |   Update On 2023-02-03 05:39 GMT
  • குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
  • வானம் கரும் மேகத்துடன் காணப்பட்டது

கரூர்:

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்ததாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங் களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மழையின் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட் டத்தை பொறுத்தவரை மழைபெய்யாவிட்டாலும், மழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட் டதால், லேசான வெயிலின் தாக்கமும் வெகுவாக குறைந்து ஜில்லென்ற காற்று வீசியதால் மக்கள் அனைவரும் சந்தோஷமடைந்தனர். மேலும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பனிப் பொழிவும் நின்று. மழை வருவதற்கான சூழலுடன் மாவட்டம் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News