உள்ளூர் செய்திகள்

பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து

Published On 2022-12-19 09:49 GMT   |   Update On 2022-12-19 10:07 GMT
  • பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது
  • பராமரிப்பு பணிகள்

கரூர்:

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர்-திருச்சி ெரயில்வே வழித்தடத்தில் மாயனுார் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பயணிகள் ெரயில் (எண்-06882) மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சிக்கு செல்லும் ெரயில் சேவையும், திருச்சி-கரூர் பயணிகள் ெரயில் (எண்-06123) திருச்சியில் மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூருக்கு வரும் ெரயில் சேவையும் மேற்கண்ட இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News