உள்ளூர் செய்திகள்

பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

Published On 2022-07-26 08:40 GMT   |   Update On 2022-07-26 08:40 GMT
  • பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளர்
  • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்

கரூர்:

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள்அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தே–ர்வில் மாணவி அக்ஷியா 500 க்கு 497 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். மேலும் மாணவர் ஹரிஸ் குமார் 500 க்கு 489 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவி ரிதன்யா 500 க்கு 482 மதிப்பெண்ணும், மாணவி சம்யுக்தா 500 க்கு 478 மதிப்பெண்ணும், மாணவர் தீபக், ராகுல், மற்றும் மாணவி திவ்யா ஆகியோர் 500 க்கு 476 மதிப்பெண்ணும், பிரதிக்ஷா சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், வித்யாபிரியா தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெ–ண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொது–த்தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவி தக்ஷின்யா 500 க்கு 488 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் மாணவிகள் அஸ்வதி, சுவாதிகா 500 க்கு 483 மதிப்பெண் மற்றும் வணிகவியலில் 100/100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் மாணவி சிந்துஜா 500 க்கு 467 மதிப்பெண் மற்றும் இயற்பி–யல் மற்றும்வேதியி–யலில் 100 க்கு 100 மதிப்பெ–ண்ணும் மாணவர் லோகேஷ் 500 க்கு 479 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவர் முகேஷ் 500 க்கு 466 மதிப்பெண் மற்றும் வேதியியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் தேசிய கேலோ இந்தியா டென்னிஸில் தங்கப்பதக்கமும், முதல–மைச்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று கரூருக்கு பெருமை சேர்த்த மாணவி ஜனனி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500 க்கு 449 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து–ள்ளார்.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்கள் வெற்றிக்கு உறுது–ணை–யாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் கிரிஸ்டல் மற்றும் இருபால்ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்குபள்ளி–யின் தாளாளர் மோக–னரங்கன் தலைமை தாங்கி–னார் . செயலர் பத்மாவதி மோகன–ரங்கன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பொன்னா–டையும் பரிசும் வழங்கி கௌரவிக்க–ப்பட்டனர்.

Tags:    

Similar News