உள்ளூர் செய்திகள்
- கிணற்றில் மின் மோட்டார் பழுது பார்த்த போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலியானார்
- தீயணைப்பு துறையினர் வந்து உடலை மீட்டனர்
குளித்தலை,
குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்ததை சரி செய்வதற்காக ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்த ரங்கதுரை (45) பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுதுகயிறு கிணற்றில் தவறி விழுந்தவிட்டது, கிணற்றில் கயிறை எடுக்கச் செல்லும் பொழுது கிணற்றில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழப்பு, இவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர், உடலை குளித்தலை போலீசார் கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,இறந்த ரங்கதுரை ஆர்ச்சம்பட்டி ஊராட்சி மன்றத்தில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது, இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.