உள்ளூர் செய்திகள்
சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலி
- சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலியானார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை
கரூர்:
கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலாயுதம்பாளையம் அருகே ஒரத்தை பிரிவு பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கருரை சேர்ந்த சக்கரவர்த்தி (33) என்பவர் ஓட்டி சென்ற கார், செல்வம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த செல்வம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.