உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2022-09-16 08:35 GMT   |   Update On 2022-09-16 08:35 GMT
  • மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியாகினர்.
  • நடந்து சென்று கொண்டிருந்தார்

கரூர்

உப்பிடமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 85) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை உப்பிடமங்கலம் கடைவீதி ஜெகதாபி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த பொண்ணு வேல் (வயது45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பெரியசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News