உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் முதியவர் பலி

Published On 2022-10-16 09:19 GMT   |   Update On 2022-10-16 09:19 GMT
  • கரூர் சின்னஆண்டாள் கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 60).
  • மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சசிகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கரூர் சின்னஆண்டாள் கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 60). இவர் மோட்டார் சைக்கிளில் கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி சசிகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சசிகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News