உள்ளூர் செய்திகள்

தரிசு காட்டில் முதியவர் பிணம்

Published On 2023-09-18 12:58 IST   |   Update On 2023-09-18 12:58:00 IST
  • தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக கிடந்தார்
  • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

கரூர்

கரூர், தோகைமலை அருகே உள்ள பி.சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ரத்னாசலம் (வயது 75). இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ரத்னாசலத்தை அவரது மகன் கவியரசன் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்ணப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தரிசு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக கவியரசனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் சென்று அங்கு பார்த்தார். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான ரத்னாசலம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்னாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரத்னாசலம் வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தரிசு காட்டில் போட்டு விட்டு சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News