உள்ளூர் செய்திகள்

புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Published On 2023-09-08 14:55 IST   |   Update On 2023-09-08 14:55:00 IST
  • புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு ஏற்று கொண்டார்.
  • வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில்

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருச்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News