உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2023-09-10 13:02 IST   |   Update On 2023-09-10 13:02:00 IST
  • கரூர் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்
  • அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன

கரூர்,

குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்ற தண்ணீர்ப் பள்ளி சேடர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News