உள்ளூர் செய்திகள்
- குளித்தலையில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஏராளமான ஆன்லைன் லாட்டரி, பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர்
குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து போலீசார் குளித்தலை அடுத்த தண்ணீர் பள்ளி கடைவீதியில் ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர்பள்ளி சேடர் தெருவைச் சேர்ந்த ரமேஷ்(வயது 48) என்பவர் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.