உள்ளூர் செய்திகள்

கரூரில் மது விற்றவர் கைது

Published On 2023-09-20 12:00 IST   |   Update On 2023-09-20 12:00:00 IST
  • கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
  • அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகேபாலத்துறை அருகே அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சி மலை காவலன் தெரு ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த குழந்தை மணி என்பவர் மகன் மதுரை வீரன் (35) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News