உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-09-09 14:00 IST   |   Update On 2023-09-09 14:00:00 IST
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் நடவடிக்கை

கரூர் 

கரூர் குளித்தலை அருகே உள்ள மையிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் மது விற்ற வடக்கு புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News