உள்ளூர் செய்திகள்

லாரி மோதி கிராம நிர்வாக அலுவலர் பலி

Published On 2023-09-25 14:05 IST   |   Update On 2023-09-25 14:05:00 IST
  • கரூர் அருகே சிமெண்டு கலவை லாரி மோதி கிராம நிர்வாக அலுவலர் பலியானார்
  • சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 கரூர்,

கரூர் மாவட்டம், புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 28). இவர், திருச்சி மாவட்டம், இனாம்புதூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் இனாம்புதூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் அன்று மாலை பணி முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி-பாளையம் சாலையில் தண்ணீர் பந்தல்மேடு அருகே வந்தபோது, முன்னாள் திருச்சி மாவட்டம், பாளையம் கணபதி நகரை சேர்ந்த செல்வா (26) என்பவர் ஓட்டி சென்ற சிமெண்டு கலவை வாகனம் திடீரென பின் நோக்கி வந்து, கமலக்கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கமலக்கண்ணனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கமலக்கண்ணனின் தந்தை செல்வராஜ் ெகாடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News