உள்ளூர் செய்திகள்

தேசிய தடகளப் போட்டிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு

Published On 2023-01-19 07:17 GMT   |   Update On 2023-01-19 07:17 GMT
  • தேசிய தடகளப் போட்டிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு செய்யபட்டுள்ளார்
  • பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது

கரூர்:

அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற வுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில், பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் பிரதீப், தொடர் ஓட்டப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வு செய்யப்பட்ட மாணவரை, கல்லூரி முதல்வர். உட ற்கல்வித்துறை இயக்குநர் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாண வர்களும் பாராட்டினர்.




Tags:    

Similar News