உள்ளூர் செய்திகள்
இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
- இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது
கரூர்:
முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவுநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு, இந்திரா காந்தி திருஉருவப்படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில சேவா தள செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாவட்ட சேவா தள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகேஸ்வரன், சின்னையன், நகரத்தலைவர் பெரியசாமி, தெற்கு நகரத்தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகரத்தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் அனைத்து
துறை சார்ந்த தலைவர்களும் நிர்வாகிகளுக்கும் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.