உள்ளூர் செய்திகள்

கரூர் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை பேரவை தொடக்க விழா

Published On 2023-07-12 07:26 GMT   |   Update On 2023-07-12 07:26 GMT
  • கரூர் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை பேரவை தொடக்க விழா நடைபெற்றது
  • விழாவில் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன், கல்லூரியின் துணை முதல்வர் ரதி தேவி, கல்லூரி உள்தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன வடிவு ஆகியோர்கள் பங்கேற்று பேசினர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள நவரசம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழை நேசித்து படியுங்கள், சுவாசித்து படியுங்கள், தமிழால் உயருங்கள், தமிழால் வளருங்கள், தமிழை உயர்த்தி வாழ்வின் ஆதாரம் தமிழென்று பெருமையாக சொல்லுங்கள் என்று சிறப்புரை ஆற்றி அறம் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் யோகப்பிரியா, சரண்யா, சங்கீதா, சண்முகபிரியா, நித்யா, கல்பனா, பூமதி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் பிற துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News