உள்ளூர் செய்திகள்
- கரூரில் உடல் நலம் குன்றிய பெண் மாயமானார்
- தாய் மாயமானதாக மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்
கரூர்,
கரூர் அருகே, தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய் துன்னார். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை அசோக்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த ஜான்வெட்சி என்பவரது மகள் சகிலா பானு (வயது 47). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 10ல் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சகிலா பானு, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சகிலா பானுவின் மகள் ஆல்வின் சன்மோஸ் போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசா ரிக்கின்றனர்.