உள்ளூர் செய்திகள்

வைக்கோல் லாரி எரிந்து நாசம்

Published On 2023-02-24 12:43 IST   |   Update On 2023-02-24 12:43:00 IST
  • வைக்கோல் லாரி எரிந்து நாசமானது
  • மின் கம்பி மீது உரசியதில் சம்பவம்

கரூர்:

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே, தம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு வைக்கோலை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. தாளியாபட்டி சாலை அருமைக்காரன்புதுார் பகுதியில் இந்த லாரி வந்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய வைக்கோல் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த, கரூர் தீயணைப்பு துறையின சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரி முழுதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.




Tags:    

Similar News