உள்ளூர் செய்திகள்

கார் மோதி விவசாயி படுகாயம்

Published On 2023-07-16 12:28 IST   |   Update On 2023-07-16 12:28:00 IST
தளவாபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி படுகாயம் அடைந்தார்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (45). விவசாயி.இவர் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த கார் முருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முருகன்கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முருகனின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது22) வேலாயுத ம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News