உள்ளூர் செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-07-21 11:49 IST   |   Update On 2023-07-21 11:49:00 IST
  • விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது

கரூர்:

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News