உள்ளூர் செய்திகள்

மன வேதனையில் டிரைவர் தற்கொலை

Published On 2023-01-23 11:49 IST   |   Update On 2023-01-23 11:49:00 IST
  • மன வேதனையில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • அக்கா பானுமதிவுடன் வசித்து வந்துள்ளார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள தேசியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 42). டிரைவா். இவருக்கும், மணப்பாறை அருகே உள்ள குமாரவாடி பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி என்பவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். தற்போது பாபுஜி தேசிய மங்கலத்தில் உள்ள தனது அக்கா பானுமதிவுடன் வசித்து வந்துள்ளார்.

மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்ட காரணத்தால் பாபுஜிக்கு குடிப்பழக்கம் அதிகமாகி அவருக்கு வயிறு மற்றும் முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் பாபுஜியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News