உள்ளூர் செய்திகள்

ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

Published On 2023-11-01 07:49 GMT   |   Update On 2023-11-01 07:49 GMT
  • புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
  • தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது. உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் நாகராஜன், பாதுகாப்பு பிரிவு துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மனிதவளம் பிரிவு முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்

Tags:    

Similar News